Sunday, July 30, 2017

9. அப்பா எடுத்த சபதம்

என் தந்தையினுடைய தங்கை பெயர் செல்வரங்கம். பெயரைப் போலவே செல்லம். கடைக்குட்டி என்பதால் செல்லமாக வளர்ந்தவர். அவருடைய தோழிகளாக கணபதி நாடாரின் நான்கு மகள்களும் இருந்தனர்.
அவர்களுடன் எப்பவும் கூட்டணி அமைத்துக் கொண்டு கலகலப்பாக விளையாடியவர். பாய்ந்து வரும் வாய்க்கால் தண்ணீரில் எதிர்நீச்சல் போட்டு பந்தயத்தில் ஜெயிப்பவர்.
அடுக்கி இருக்கும் பனைகள் மீது ஏறி டான்ஸ் ஆடுவார். கோபம் வந்தால் நான்கு நாளைக்கு பேசாமல் இருப்பார். தோழிகளை காணாமல் தொங்கிய முகத்துடன் வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர், அவர்கள் மீது தவறு இருக்கா, நாம் மீது தவறு இருக்கா என்று யோசித்துப் பார்க்க மாட்டார். திடீர் என தானே முன் சென்று பேச்சை ஆரம்பிப்பார். ஆத்திரப்படவும், வருத்தபடவும், விட்டுக் கொடுக்கவும் தெரிந்தவர்.
அவரது தைரியத்தை பார்த்து, அவரை, அவர்கள் ஜான்சிராணி என்று அழைப்பார்களாம். உன் வீட்டுக்காரர் உனக்கு அடங்கித்தாடி போவார் என்று கிண்டல் செய்வார்களாம்.
அவ்வளவு தைரியசாலியான செல்வரங்கத்தை, சிறுபனையூரில் வசித்த தம்புசாமி மகன் சுப்பையன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். தாய் வீட்டில் இருந்த சுந்தந்திரம் கணவர் வீட்டில் கிடைக்கவில்லை.
பெண்கள் அடக்கம் ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று நீதிகளை போதித்து அடிமை வாழ்க்கையை வாழ வைத்தார்கள். யாரிடமும் சிரித்து பேசினால் கூட தவறு என்று அவரது சிரிப்பையும் பறித்துக் கொண்டார்கள்.
தாய் வீட்டில் ஜான்சிராணி போல தைரியமாக வாழ்ந்தவர், கணவர் வீட்டில் தைரியத்தை இழந்து கோழையானார். அதற்கு காலம் அவருக்கு ஜெயராமன் என்கிற மகனையும், ஜெயலட்சுமி என்கிற மகளையும் கொடுத்திருந்தது.
திடீர் என கணவர் இறந்துவிட அவரது மொத்த சந்தோஷமும் பறிபோனது. கொழுந்தனிடம் பேசினால் கூட குத்தம் என்றார்கள். அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இப்படிப்பட்டவர்கள் முகத்தில் இனி விழிக்கக் கூடாது என்று ஒரு நாள் முடிவு செய்தவர் தன்னை மாய்த்துக் கொண்டார்.
அவர் இறந்த செய்தி கிடைத்ததும் அதிர்ந்து போனார் என் தந்தை. அஞ்சலி செலுத்த சென்ற போதுதான் அவர் தூக்கு போட்டு இறந்தது தெரிய வந்திருக்கிறது. ஆத்திரத்தில் துடித்தார். இடுப்பில் இருந்த கத்தியை தடவிப் பார்த்துக் கொண்டார். இடுகாடு சென்ற பிறகு தங்கையை தற்கொலைக்கு தூண்டியவரை பழி தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்போது, தாய் இறந்து கிடப்பது கூட அறியாமல், தாயிடம் பால் குடிக்க முயன்றிருக்கிறார் அவரது மகள் ஜெயலட்சுமி. பால்குடி மறக்காத குழந்தையின் அந்த செயல், என் தந்தையின் மனதை மாற்றியது.
கோபத்தில் கொலை செய்து, அதன் எதிர்விளைவு சிறைக்கு செல்ல வேண்டி வரும். அதனால் வருமானம் இல்லாமல், தங்கை குழந்தைகள் மட்டுமல்ல, அக்காள் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்துப் பார்த்தார். ஆனாலும் மனம் ஆறவில்லை.
அதனால், கத்திக்கு இடம் கொடுக்காமல், கத்தியும் பேசாமல், புத்திக்கு மட்டும் வேலை கொடுத்தார்.
அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆணாதிக்க சிந்தனையும், ஆத்திரமும்தான் காரணம் என்பதை புரிந்து கொண்ட என் தந்தை, இனி இந்த ஊரில் இருக்கக் கூடாது என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
ஆனால், சுப்பையாவின் சகோதரர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளை நாங்களே வளர்த்து கொள்கிறோம் என்று குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டார். ஊரும் உறவும் அதையே சொன்னது. அவர்கள் இருந்தால்தானே அவர்களுக்கு பாதுகாப்பு. இல்லையென்றால் கோபாலகிருஷ்ணன் கோபத்தில் குடலை பிடுங்கி மாலையாக போட்டுக் கொள்வானே?
அன்று அந்த ஊரில் இருந்து கிளம்பிய என்னுடைய தந்தை, என் தங்கை இறந்த இந்த மண்ணில், இனி தன் கலாடி படக் கூடாது என்று உள்ளுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்.
தனது இறுதி மூச்சு வரை அந்த கிராமத்திற்குள் அவர் நுழையவே இல்லை.
என் தந்தையினுடைய தங்கை பெயர் செல்வரங்கம். பெயரைப் போலவே செல்லம். கடைக்குட்டி என்பதால் செல்லமாக வளர்ந்தவர். அவருடைய தோழிகளாக கணபதி நாடாரின் நான்கு மகள்களும் இருந்தனர்.
அவர்களுடன் எப்பவும் கூட்டணி அமைத்துக் கொண்டு கலகலப்பாக விளையாடியவர். பாய்ந்து வரும் வாய்க்கால் தண்ணீரில் எதிர்நீச்சல் போட்டு பந்தயத்தில் ஜெயிப்பவர்.
அடுக்கி இருக்கும் பனைகள் மீது ஏறி டான்ஸ் ஆடுவார். கோபம் வந்தால் நான்கு நாளைக்கு பேசாமல் இருப்பார். தோழிகளை காணாமல் தொங்கிய முகத்துடன் வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர், அவர்கள் மீது தவறு இருக்கா, நாம் மீது தவறு இருக்கா என்று யோசித்துப் பார்க்க மாட்டார். திடீர் என தானே முன் சென்று பேச்சை ஆரம்பிப்பார். ஆத்திரப்படவும், வருத்தபடவும், விட்டுக் கொடுக்கவும் தெரிந்தவர்.
அவரது தைரியத்தை பார்த்து, அவரை, அவர்கள் ஜான்சிராணி என்று அழைப்பார்களாம். உன் வீட்டுக்காரர் உனக்கு அடங்கித்தாடி போவார் என்று கிண்டல் செய்வார்களாம்.
அவ்வளவு தைரியசாலியான செல்வரங்கத்தை, சிறுபனையூரில் வசித்த தம்புசாமி மகன் சுப்பையன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். தாய் வீட்டில் இருந்த சுந்தந்திரம் கணவர் வீட்டில் கிடைக்கவில்லை.
பெண்கள் அடக்கம் ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று நீதிகளை போதித்து அடிமை வாழ்க்கையை வாழ வைத்தார்கள். யாரிடமும் சிரித்து பேசினால் கூட தவறு என்று அவரது சிரிப்பையும் பறித்துக் கொண்டார்கள்.
தாய் வீட்டில் ஜான்சிராணி போல தைரியமாக வாழ்ந்தவர், கணவர் வீட்டில் தைரியத்தை இழந்து கோழையானார். அதற்கு காலம் அவருக்கு ஜெயராமன் என்கிற மகனையும், ஜெயலட்சுமி என்கிற மகளையும் கொடுத்திருந்தது.
திடீர் என கணவர் இறந்துவிட அவரது மொத்த சந்தோஷமும் பறிபோனது. கொழுந்தனிடம் பேசினால் கூட குத்தம் என்றார்கள். அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இப்படிப்பட்டவர்கள் முகத்தில் இனி விழிக்கக் கூடாது என்று ஒரு நாள் முடிவு செய்தவர் தன்னை மாய்த்துக் கொண்டார்.
அவர் இறந்த செய்தி கிடைத்ததும் அதிர்ந்து போனார் என் தந்தை. அஞ்சலி செலுத்த சென்ற போதுதான் அவர் தூக்கு போட்டு இறந்தது தெரிய வந்திருக்கிறது. ஆத்திரத்தில் துடித்தார். இடுப்பில் இருந்த கத்தியை தடவிப் பார்த்துக் கொண்டார். இடுகாடு சென்ற பிறகு தங்கையை தற்கொலைக்கு தூண்டியவரை பழி தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்போது, தாய் இறந்து கிடப்பது கூட அறியாமல், தாயிடம் பால் குடிக்க முயன்றிருக்கிறார் அவரது மகள் ஜெயலட்சுமி. பால்குடி மறக்காத குழந்தையின் அந்த செயல், என் தந்தையின் மனதை மாற்றியது.
கோபத்தில் கொலை செய்து, அதன் எதிர்விளைவு சிறைக்கு செல்ல வேண்டி வரும். அதனால் வருமானம் இல்லாமல், தங்கை குழந்தைகள் மட்டுமல்ல, அக்காள் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்துப் பார்த்தார். ஆனாலும் மனம் ஆறவில்லை.
அதனால், கத்திக்கு இடம் கொடுக்காமல், கத்தியும் பேசாமல், புத்திக்கு மட்டும் வேலை கொடுத்தார்.
அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆணாதிக்க சிந்தனையும், ஆத்திரமும்தான் காரணம் என்பதை புரிந்து கொண்ட என் தந்தை, இனி இந்த ஊரில் இருக்கக் கூடாது என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
ஆனால், சுப்பையாவின் சகோதரர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளை நாங்களே வளர்த்து கொள்கிறோம் என்று குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டார். ஊரும் உறவும் அதையே சொன்னது. அவர்கள் இருந்தால்தானே அவர்களுக்கு பாதுகாப்பு. இல்லையென்றால் கோபாலகிருஷ்ணன் கோபத்தில் குடலை பிடுங்கி மாலையாக போட்டுக் கொள்வானே?
அன்று அந்த ஊரில் இருந்து கிளம்பிய என்னுடைய தந்தை, என் தங்கை இறந்த இந்த மண்ணில், இனி தன் கலாடி படக் கூடாது என்று உள்ளுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்.
தனது இறுதி மூச்சு வரை அந்த கிராமத்திற்குள் அவர் நுழையவே இல்லை.

No comments:

Post a Comment